அன்பு உ பி களே ர ர களெ தோழர்களே நமது தனைத்தலைவர் அஞ்சா நெஞ்சன் கேதான் தேசாய் அவர்களை கைது செய்த வன் கொடுமையை எதிர்த்து இந்த மாபெரும் பேரணியை திரட்டியுள்ளோம்.இந்த அரசை அறைகூவல் விடுத்து கேட்கிறோம். என்ன தவறு செய்தார் எங்கள் தலைவர் ?. தங்க கையிருப்பை அதிகப்படுத்தி இந்திய திரு நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்திக்காட்ட முயன்றது ஒரு தவறா ? இல்லை ரிசர்வ் வங்கிக்கு இணையாக ஒரு ஏழைக் குடிமகனும் 1800 கோடி ரூபாயை கையில் வைத்திருக்க முடியும் என்று நிரூபித்து காட்டியது ஒரு தவறா ?
என்னது எங்கள் இன்னுயிர் தலைவர் லஞ்சம் வாங்கினாரா ? லஞ்சம் வாங்கியது ஒரு தவறா ?. லஞ்சம் வாங்குவது என்பது ந்ம் தாய் திரு நாட்டின் பாரம்பரிய கலாச்சரம் என்பதை மறந்து விட்டு லுச்சா தனமாக பேசாதீர்கள்.அவர் செய்துள்ள சேவைகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.தன்னுடைய அளவற்ற சேவை பணிகளுக்கிடையில் தன்னுடைய அலுவலக மாடியில் மஜாஜ் சென்டர் நடத்தி வந்த மாமனிதனை மனித நேய பேரரசை கைது செய்தது வெளி நாட்டு சதி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறோம்.
வருங்கால பிரதம மந்திரி குடியரசுத்தலைவர் கேதான் தேசாய் அவர்களை விடுதலை செய்வதோடு அவருக்கு மருத்துவத்தில் நோபல் பரிசு கொடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக உடனடியாக நியமிக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
இப்படிக்கு
அகில இந்திய லஞ்சம் வாங்குவோர் சங்கம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக